இன்றைய நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 20, 2023

Today Current Affairs in Tamil: ஜூலை 20, 2023 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை FreshersCorner  தலைப்புச்செய்திகளாக வழங்குகிறது. Banking, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த தொகுப்பின் மூலம் முக்கிய நிகழ்வுகளைத் தமிழில் அறிந்துகொள்ளலாம். மேலும் தினசரி நிகழ்வுகளை தமிழில் அறிய இந்த வலைத்தளத்தை பின்தொடரலாம்.

Today Current Affairs in Tamil – ஜூலை 20, 2023:

தேசிய நடப்பு:


  • உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்.
  • இன்று முதல் தக்காளி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.70க்கு விற்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஜனாதிபதி முர்மு அடுத்த மாதம் புது தில்லியில் இரண்டு நாள் நூலக விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
  • இந்தியா, ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஈடுபாடுகளை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன.
  • பாரம்பரிய மருத்துவம் பற்றிய ASEAN நாடுகளின் மாநாட்டை இந்தியா புதுதில்லியில் நடத்துகிறது.
  • நிலக்கரி மற்றும் லிக்னைட் சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டு பதிவு நாளை நிலக்கரி அமைச்சகம் 25 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

சர்வதேச நடப்பு:


  • BRICS மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி கலந்து கொள்ள மாட்டார் என தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
  • இஸ்ரேலிய முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் reserve படை வீரர்கள் நீதித்துறை சீர்திருத்தத் திட்டங்களுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் தொடர்கின்றன.
  • கென்யா: வரி உயர்வுக்கு எதிராக கிபேராவில் தொடங்கிய போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசார்மீது கற்களை வீசினர்.

வணிகம் & பொருளாதாரம்:


  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்குமென ADB கணித்துள்ளது.
  • பங்குச் சந்தை: சென்செக்ஸ் 302 புள்ளிகள் அதிகரித்துள்ளது, நிஃப்டி 19,833 புள்ளிகளில் நிலைத்திருக்கிறது.
  • ஆசிய சந்தைகளும் ஐரோப்பிய சந்தைகளும் கலவையான வகையில் முடிவடைந்தன.
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.10 ஆக இருந்தது.
  • தங்கம் விலை ரூ.50 உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.59,815ஆக விற்பனை செய்யப்பட்டது.

விளையாட்டு:


  • பெண்கள் கிரிக்கெட்: டாக்காவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
  • ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடும் பதினோரு வீரர்களை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • மாலத்தீவில் நடந்த ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • நட்சத்திர இந்திய ஷட்லர் ஹெச்.எஸ். பிரணாய் மற்றும் பிரியான்ஷு ரஜாவத் கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

மேலும் படிக்க:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top